Thursday, April 30, 2009

அரசு (கதை - 6)

Share |
ஏப்ரல் 26 ஞாயிற்றுக்கிழமை மதியம், சென்னை

தொலைக்காட்சிகள் எல்லாம் அவசர செய்தி வாசித்தது.மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் சில நுண் உயிரினிங்கள் கலந்திருக்கலாம் என்றும், ஆகையால் அனைவரும் குடிநீரை ஒரு நிமிடமாவது காய்ச்சி குடிக்க வேண்டும் என்றும் சென்னை குடிநீர் வாரியம் கேட்டுக்கொண்டது. அரசு, குடிநீர் வாரியத்துடன் இணைந்து, விரைந்து செயல்பட்டு இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் என்றும் அந்த அரசு குறிப்பில் கூறப்பட்டது.

ஏப்ரல் 26 ஞாயிற்றுக்கிழமை இரவு, சென்னை

தொலைக்காட்சி, மாலை நாளிதழ்கள், வானொலி என எல்லா சாதனங்களும் இந்த தகவல் எல்லோருக்கும் சேர வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டது.மேலும் இந்த பிரச்சனை எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்றும் விளக்கம் கொடுத்தது.

மாநில முதல்வர் எல்லோருக்கும் விடுக்கும் வேண்டுகோள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சென்னை குடிநீர் வாரியத்தின் தலைவர் பேட்டியும் ஒளிபரப்பானது.

கே: நான் எதற்காக தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்?
ப: சென்னை குடிநீர் வாரியத்தின் நீர்த்தேக்கம் எண் ஆறில் நுண் உயிரினிங்கள் இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம். ஆகையால் மக்களின் பாதுகாப்பு கருதி, தண்ணீரை காய்ச்சி குடிக்க கேட்டுக்கொள்கிறோம்.

கே: தண்ணீரை காய்ச்சி குடிப்பதால் இந்த உயிரினிங்கள் அழிக்கப்படுமா?
ப: தண்ணீரை காய்ச்சி குடிப்பதால் இந்த உயிரினிங்கள் கொல்லப்படும்.

கே: எவ்வளவு நேரம் நான் தண்ணீரை காய்ச்ச வேண்டும்?
ப: உணவுக்கு உபயோக்கிபடும் தண்ணீரையும், குடிக்கும் தண்ணீரையும் ஒரு நிமிடமாவது நன்றாக காய்ச்ச வேண்டும்.

கே: அந்த தண்ணீரில் குளிப்பது, பல் துலக்குதல் போன்றவற்றால் எதாவது பிரச்சனை ஏற்படுமா?
ப : இல்லை. தண்ணீரை உட்கொள்வதால் மட்டுமே பிரச்சனை வர வாய்ப்புள்ளது.

கே: வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் போன்றோர் ஏதாவது தனியாக செய்ய வேண்டுமா?
ப : இல்லை. தண்ணீரை காய்ச்சுவது மட்டுமே போதுமானது.

கே : இந்த நுண் உயிரினிங்கள் எப்படி இருக்கும்?
ப : இவற்றை நம் சாதரண கண்களினால் காண முடியாது. மைக்ரோஸ்கோப் எனப்படும் நுண்காட்டி வழியாக பார்த்தல் ஒரு கொண்டை ஊசி போல காணப்படும்.

கே : இவற்றை உட்கொண்டால் உண்டாகும் பாதிப்புகள் என்ன?
ப: இது வரை பாதிப்புகள் கண்டுபிடிக்க முடியவில்லை. நாங்கள் தொடர்ந்து முயற்சிக்கிறோம்.

அது ஒரு தேவையான, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேட்டியாக தோன்றியது. மேலும் பிரச்சனையின் உக்கிரமும் புரிந்தது.
"தெரிஞ்ச பேய்நாலும் பரவா இல்ல. தெரியாத பிசாசா இருக்கே இது." மக்களின் கவலை வெளிப்பட்டது.

வீட்டில் இருப்பவர்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்கலாம். ஆனால் வெளியே அலைவோரின் நிலைமை பற்றி கேள்வி எழுந்தது.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் இன்னொரு அரசு செய்தி வெளியானது.
அரசு கனிம நீர் (mineral water) உற்பத்தியாளர்களிடம் தண்ணீர் புட்டிகளின் விலையை குறைக்க சொல்லி இருப்பதாகவும், அதற்கு அவர்கள் இது வரை விற்ற விலையில் இருந்து பாதி விலைக்கு விற்க முடிவு செய்திருப்பதாகவும் அது கூறியது.

மேலும் சில நுண்ணலை அடுப்பு(microwave oven) உற்பத்தியாளர்களும் தங்களின் விலையை குறைத்துள்ளதாக கூறினர். கலன் வாயு(Cylinder gas) பற்றி கவலை கொண்ட மக்களுக்கு இது ஒரு நல்ல மாற்றாக தோன்றியது. நுண்ணலை அடுப்பில் தண்ணீர் காய்ச்சுவது சிக்கனமானதாக தோன்றியது.

திங்கட்கிழமை காலை வெளியான அரசு செய்தி குறிப்பில், கலன் வாயுவின் விலையை குறைக்க சொல்லி மத்திய அரசுக்கு மாநில அரசு கோரிக்கை ஏற்படுத்தும் என்றும், ஏற்கனவே நிறைய மக்கள் நுண்ணலை அடுப்பு வாங்குவதால் உடனடியாக மின்சார கட்டணத்தை முடிந்தவரை அரசு குறைத்துள்ளதாகவும் வெளியானது. இந்த மின்சார கட்டண குறைப்பு பிரச்சனை முடியும் வரை தொடரும் என்றும் சொன்னது.

மக்கள் நுண்ணலை அடுப்பு வாங்கினர்.

சில இடங்களில் கடைக்காரர்கள் கனிம நீரின் விலையை குறைத்ததாக தெரியவில்லை. சில இடங்களில் விலை குறைந்து இருந்தது. சில இடங்களில் கனிம நீர் பற்றாகுறையினால் விலை அதிகமாக இருந்தது.

நுண்ணலை அடுப்பின் விலை 50 சதவீத தள்ளுபடியில் விற்பதாய் கடைகள் தெரிவித்தன. மக்கள் சரியான நேரத்தை பயன்படுத்தி கொண்டனர். நிறைய பணம் இல்லாதவர்களுக்கு, மாத தவணை திட்டம் வழங்கப்பட்டது. மக்கள் மேலும் நுண்ணலை அடுப்பு வாங்கினர்.

அடுப்பில் காய்ச்சுவதை விட, இதுவே சரியாக மக்களுக்கு தோன்றியது. கையாள்வதும் மிக சுலபமாய் இருந்தது. யாருக்கும் எந்த நோயும் ஏற்படாமல் நுண்ணலை அடுப்பு காப்பற்றியது.


சென்னை குடிநீர் வாரியம் ஒரு வார காலம் போராடி தண்ணீரில் நுண் கிருமிகள் இல்லை என கண்டுபிடித்தது.

ஏப்ரல் 26 ஞாயிற்றுக்கிழமை காலை, சென்னை மாநில முதல்வர் இல்லம்.

"தலைவரே உங்கள நம்பி நெறைய மைக்ரோவேவ் அடுப்பு இறக்கிட்டேன். சொல்லுங்க இப்போ எப்டி விக்குறது? "

"விக்குறது இருக்கட்டும். எவ்ளோ போட்ருக்க..?"
"10. எண் தம்பியோட மினரல் வாட்டர் பிசிநெஸ்ல இருந்து வந்த காசு எல்லாம். அவன் பிசிநெசும் இப்போ ரொம்ப டல்லாம். அவன்தான் மேஜர் பார்ட்னர் இப்போ வரைக்கும். இப்போ அதுக்கு வேற போட்டி வர மாதிரி சொல்றான்.

"எவ்ளோல முடிக்கலாம்..?"நீங்களே சொல்லுங்க தலைவரே."
"2 ரெண்டுக்கும் 2."

"2 ஆ..?"
"ரெண்டு கல்லுல ஒரு மாமரம் - கேள்வி பட்ருக்க..?"

"புரியலையே தலைவரே..."
"அங்க இருக்க புத்தகத்துல குடிநீர் வாரியம்-நு ஒரு நம்பர் இருக்கும், அத பார்த்து சொல்லு".

Monday, April 27, 2009

பாகிஸ்தான் மண்ணில் தலிபான்.

Share |
நான் வாழும் ஊரில் குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்கள். இன்னொரு குழந்தையோடு விளையாடுகிறார்கள். தொலைக்காட்சி, கேளிக்கைகள், விளையாட்டு சாதனங்கள், கணிப்பொறி என்று அவர்களின் உலகம் உள்ளது. மிக சிலர் தொலைந்து போகிறார்கள்.

நான் பிறந்த மண்ணில் குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்கள். இன்னொரு குழந்தையோடு விளையாடுகிறார்கள். தொலைக்காட்சி, கேளிக்கைகள், விளையாட்டு சாதனங்கள், கணிப்பொறி என்று அவர்களின் உலகம் உள்ளது. சிலர் யாரும் இல்லாதவராய் மாற்றப்படுகிறார்கள். சிலர் சீரழிக்கப்படுகிறார்கள்.

எங்களிடம் இருந்து பிரிந்த எங்கள் சகோதர நாட்டில் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. மற்றொரு குழந்தையோடு விளையாட முடிவதில்லை. அவர்களுக்கு ஒரே புத்தகம்தான் கற்பிக்கப்படுகிறது. அவர்களுள் ஒரே எண்ணம்தான் வளர்க்கப்படுகிறது. 5, 6 வயது குழந்தைகளுக்கு நாம் பொம்மை துப்பாக்கி வாங்க யோசித்துகொண்டிருக்கும் வேலையில், நிஜ துப்பாக்கிகள் அவர்களின் கையில் திணிக்கப்படுகிறது.

பெண் குழந்தைகளுக்கு கல்வியும், வெளியுலக தொடர்பும் முற்றிலும் மறுக்கப்படுகிறது. பெண்கள் ஒரு பொருட்டாக கூட மதிக்கப்படுவதில்லை.

பிற்காலத்தில் நீ என்ன செய்ய விரும்புகிறாய் என்பது மாறி, நீ எந்த குழுவில் கொலைகாரனாக இருக்க விரும்புகிறாய் என கேள்வி எழுப்பப்படுகிறது.
மக்களின் ஏழ்மை நிலையும், அதிகாரம் படைத்தோரின் வெற்று பேச்சும் அப்பாவிகளை பினக்குவியலாய் மாற்றிக்கொண்டுள்ளது.

ஓரிடம் விட்டு இன்னொரு இடத்திற்கு மக்கள் துரத்தப்படுகிறார்கள்.

இந்த காட்சிகளில் வரும் குழந்தைகளுக்கு ஏதேனும் பேராபத்து வந்துவிடுமோ என மனம் சஞ்சலம் கொள்கிறது. பேட்டி கண்ட பெண்மணியின் துணிச்சலை தாண்டி எங்கே அவர் கொல்லப்படுவாரோ என பயம் ஏற்படுகிறது.

பார்த்துணர : http://www.pbs.org/frontlineworld/stories/pakistan802/video/video_index.html
ஆசிரியர் ஷர்மீன் நேர்முகம் :
http://www.pbs.org/frontlineworld/blog/2009/04/pakistanas_tali.html

நன்றி : http://www.pbs.org/

Monday, April 20, 2009

யாழிசை ஒரு அறிமுகம்

Share |
"இயந்திர வாழ்கை நம்மை அல்லும் பகலும் ஆட்டி படைக்க ஒரே விடிவு என நான் கருதியது தமிழ் இலக்கிய வாசிப்பு...இது ஓர் இனிய இலக்கிய அனுபவ பயணம்.வாழ்வின் தேடல் குறித்து உணர செய்ய வாசிப்பு என்பது ஒரு சுகானுபவம்."

தன்னுடைய பதிவு பற்றி லேகாவின் வார்த்தைகள் இவை.

இயந்திர வாழ்க்கை மட்டுமின்றி, எவ்வயதினரும் தங்களுடைய வாழ்க்கையயை அழகாக செப்பநிடவைப்பது புத்தகங்கள். நானும் என் நண்பனும் பேசிக் கொண்டிருக்கையில், எல்லா குழந்தைகளும் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் வாய்ப்பு ஏற்படுகிறதோ இல்லையோ, கண்டிப்பாக நூலகத்திற்கு செல்ல வேண்டும் என நினைப்போம். அப்படி ஒரு பழக்கத்தை நம் பெற்றோர் நம்மீது திணித்தால் கூட அது தவறன்று. எல்லா தரப்பினரையும் ஏதோ ஒரு புத்தகம் நிட்சயமாய் கவரப் போவது நிட்சயமான உண்மை .

எத்தனையோ நல்ல புத்தகங்கள் நமக்கு வாய்த்திருந்தாலும், நம் முன்னோர் நல்ல புத்தகங்களை பற்றி நமக்கு சொல்லாதது ஒரு குறையே. இன்னும் சொல்லப்போனால் நம் ஒவ்வொருவரின் தந்தையும், அன்னையும் செய்ய வேண்டிய ஒரு மாபெரும் பணியை இவரது வலைப்பதிவு செய்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

ஒவ்வொரு புத்தகத்தையும் ஆழ்ந்து படித்து, அதிலுள்ள ஒவ்வொரு உணர்ச்சியையும் தன்னுள் உள் வாங்கி, மனம் எழுப்பும் கேள்விகளுக்கு விடை தேட முயற்சித்து நம்மையும் அந்த பாதைக்கு வெகு சுலபமாக அழைத்து செல்வது இவரின் 'நாவல் பற்றிய விமர்சனங்கள்'.

வெவ்வேறு தரப்பில் இருக்கும் நிறைய எழுத்தாளர்களின் புத்தகங்களை தேடி தேடிப் படித்து, நமக்கும் ஒரு நல்ல வாசிப்பை உருவாக்குகிறார். இவரின் எழுத்து நடையும் கூடிய விரைவில் இவரும் ஒரு நல்ல எழுத்தாளராக உருவாகப் போகிறார் என்பதற்கு சான்று.

அது மட்டுமன்றி நல்ல எழுத்தாளர்கள் பற்றியும் நமக்கு அறிமுகம் செய்து வைத்து நம்மையும் புத்தக உலகத்திற்கே அழைத்து செல்கிறார்.

புத்தகங்கள் மட்டுமின்றி நல்ல கட்டுரைகள், உலக திரைப்படங்கள் என இவரின் விமர்சனமும், கருத்து பகிர்வும் தொடர்கிறது.

இலக்கிய உலகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ராமகிருஷ்ணன் அவர்களின், 2008 விருப்ப பட்டியலில், லேகாவின் வலைப்பதிவும் ஒன்று என்பது அவர் செய்யும் பணிக்கு கிடைத்த ஒரு நிறைவான அங்கீகாரம்.http://www.sramakrishnan.com/deep_story.asp?id=216&page=

நீங்கள் ஒரு பெற்றோராரக இருந்து, உங்கள் குழந்தை நாளை உங்களிடம் நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்ய சொல்லி கேட்டால், உங்களுடைய கைவிரல் காட்டும் இடம் இதுவாகத்தான் இருக்கும்:http://www.yalisai.blogspot.com/

Friday, April 17, 2009

பிஞ்சமண்டயன் (கதை - 5)

Share |
"டேய், எங்கடா நம்ம புது மாப்ள, வந்துட்டானா..?" நான் கேட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்தேன்.
"அத ஏன் மாப்ள கேட்குற.....என்னடா பிஞ்சமண்டயான்னு கேட்டதுக்கு ஒரு மாதிரி பார்வை பார்த்துட்டு ரூம்குள்ள போனான்...இன்னும் வெளிய வரல...."


பிஞ்சமண்டயன். அவனுடைய இயற்பெயர் ரவி என்றாலும், அவனை எல்லோரும் அழைப்பது இப்படிதான். எல்லோரும் நினைப்பது போல் அவன் முன் தலயில் விழுந்த வலுக்கயால்தான் இப்படி ஒரு பெயர் வந்தது அவனுக்கு. முதலில் கொஞ்சம் கோபமடைந்தாலும் நாட்கள் செல்ல செல்ல இது அவனுக்கும் சகஜமாகிபோனது.

கல்லூரி படிக்கும்போது அவனுடைய தலைமுடி நன்றாய்தான் இருந்திருக்கிறது. வேலைக்காக சென்னை வந்து மூன்றே மாதத்தில், முன் மண்டையெல்லாம் கொட்டிபோனது. பின் தலையில் ஒன்றும் பிரச்சனை இல்லை. சரி செய்ய வேண்டும் என யோசிப்பதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.

சென்னை தண்ணீரை பற்றி யாரவது உயர்வாக பேசினால் இவனுக்கு கோபம் வரும்.

இந்த முறை அவன் ஊருக்கு போனது அவனுக்கு பெண் பார்க்க. மிகுந்த மகிழ்ச்சியோடு சென்றான். அவர்கள் வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்து சுமார் 1 வருடம் ஆகிறது. வந்த வரன் எல்லாம் ஜாதகம் பொருந்தாத காரணத்தினால், திருமணம் என்பது அவனுக்கு ஒரு கனவாகவும், கவலையாகவும் போனது.

பெண் ஒன்று அமைந்துவிட்ட மகிழ்ச்சியில் எங்களுக்கெல்லாம் விருந்தளித்தான்.

விருந்தின் போது, சக தோழன் ஒருவன், "டேய் பிஞ்ச மண்டையா ...ரொம்ப சந்தோசமா இருக்குடா..." என்றான்.
"thanks da"
"ஆமா பிஞ்சமண்டயா, உனக்கே கல்யாணம்னா அப்போ எங்களுக்கெல்லாம் எவ்ளோ ஈசியா நடந்துரும்..." எல்லோரும் சிரித்தனர்.
ரவியும் சிரித்தான்.
"டேய், பில் கொடுக்கவா வேணாமா...?"
"உன்ன கல்யாணம் பண்ற அந்த பொண்ணு ரொம்ப கொடுத்துவச்சவடா...பில் நீயே கொடுத்துரு மாப்ள.."

நான் ரவியை தனியாக அழைத்தேன்.
"உன் மனசுக்கு எல்லாம் நல்லபடியாக அமையும். எண்ணம்போல் வாழ்வு. சரி சொல்றதுக்கு முன்னாடி அந்த பொண்ணுட்ட பேசி முடிவு எடு. வாழ்த்துக்கள்" என்றேன்

ரவி உண்மையிலேயே ஒரு சிறந்த மனிதன். யாருக்கு உதவி என்றாலும் முதல் ஆளாக இருப்பவன். எங்கள் எல்லோரின் அன்புக்கு உரியவன். நானும் அவனும் ஒரே கல்லூரியில் வேறு படித்ததால் எங்களுக்குள் என்றுமே ஒரு நல்ல நட்பு இருந்து வந்தது.


இப்பொழுது என்ன கோபம் அவனுக்கு. பெண் இவன் நினைத்த மாதிரி இல்லையா.
இல்லை அவள் வேறு யாரையாவது மனதில் நினைத்திருந்தாளா..?

நான் அறைக்குள் சென்றேன். நல்ல இருட்டாக இருந்தது.

"ரவி.."
தூங்குகிறான் போல. சரி பிறகு எழுப்பலாம்.
"வினோத்"

"முழிச்சிட்டுதான் இருக்கியா. பேருந்துல வந்தது அசதியா இருக்கா.."
"அதெல்லாம் இல்லடா."

உடனே நான் தொடங்க வேண்டாம் என்று நினைத்தேன்.

"நான் வேணா போய் நம்ம ரெண்டு பேருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வரவா"
"அதெல்லாம் வேணாம் மாப்ள."

"சரி கொஞ்சம் நேரம் கழிச்சு ரெண்டு பேருமே போலாம். அப்புறம் ஊர்ல அப்பா, அம்மாவெல்லாம் எப்படி இருக்காங்க.."
"ம்ம்...நல்லா இருக்காங்கடா"

நான் உடை மாற்றி முடித்து மின் விளக்கை எரிய வைத்தேன்.
அவன் முகம் பார்த்தேன்.

"ரவி....." அவன் முகம் கொஞ்சம் வீங்கி போயிருந்தது. அவன் படுத்திருந்த தலையணை எல்லாம் ஈரம்.

அதற்குள் என் இன்னொரு நண்பன் அறைக்குள் வர அவன் நடப்பது புரியாமல்,
"பிஞ்சமண்டயா...ஊர்ல இருந்து வந்திருக்க...திங்க எதாவது கொண்டு வந்தியா..." என்றான்.

ரவிக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ....
அவன் பக்கத்தில் கிடந்த அவன் காலணி எடுத்து நண்பன் மீது விட்டெறிந்தான்.
பதிலுக்கு நண்பன் அவன் மீது பாய போக, நான் அவனை தடுத்து வெளியேற்றினேன்.

பிரச்சனை புரிந்தது.
"என்னடா ரவி..? பொண்ணு வேணாம்னு சொல்லிருச்சா..முடினால பிரச்சனையா..."

அவன் ஒன்னும் பேசவில்லை.பச்சை குழந்தை போல் அழத்தொடங்கினான்.

அவனை சரி செய்து விஷயம் தெரிந்து கொண்டேன். இதுவரை பொருந்தாத ஜாதகம் என்று சொன்னதெல்லாம் பொய். எல்லா பெண்களும் இவன் புகைப்படம் பார்த்து இவனை நிராகரித்து உள்ளனர். வருத்தமாய் இருந்தது.

இந்த பெண்ணுக்கு வீட்டில் இவனுடைய பழைய புகைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது. விஷயம் தெரியாமல் சென்ற இவனுக்கு அவமானமாய் போய்விட்டது.

தொடர்ந்து அழுதான். நானும் மனரீதியாக பேசிப்பார்த்தேன். அவனை வெளியே கூட்டிச் செல்ல முயன்றேன். முடியவில்லை.

இவனிடம் தர்க்க ரீதியாகத்தான் பேச வேண்டும்.

"ரவி...நான் ஒன்னு கேட்குறேன். ஒழுங்கா பதில் சொல்லு"
"கேளு"
"உன்னோட பிரச்சினையே ஒரு உதாரணமா எடுத்துக்குவோம். இப்போ நீ ஒரு பொண்ணு பாக்குற. அந்த பொண்ணுக்கு தலையில சில இடங்கள்ல முடி இல்ல. நீ அவல ஏத்துக்குவியா..?"
"கண்டிப்பா..." உடனே பதில் வந்தது.
"கத விடாதடா.."
"இல்ல மாப்ள...நீ கேட்குறதுக்கு முன்னாடியே நான் இத பத்தி யோசிச்சேன். அப்படி ஒரு பொண்ணு வந்தா நான் ஏத்துக்குவேன். இது எனக்கு ஒரு பிரச்சனை இல்ல. மனசு ஒத்து வாழ்ரபோ இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லடா.."

அப்பா நான் ஒன்னு சொல்றேன், என்ன தப்ப எடுத்துக்காத,
அவன் முடியை சுட்டிகாட்டி, "இத பார்த்து வர்றவ இது மாதிரிதான் இருப்பா என்றேன்."
"அப்டீங்கற...."

தெரியாத பெண்களை பற்றி தவறாக பேசியதில் எனக்கு மிகுந்த வருத்தம் இருந்தாலும், இவன் இப்பொழுது கொஞ்சம் அமைதியானான்.

"சரி வா. சாப்பிட போலாம். வெளிய வேற ஒரு பஞ்சாயத்து இருக்கு..."

வெளியே வந்ததும் ரவி நண்பனிடம் மன்னிப்பு கேட்டான்.
"என்னையும் மன்னிச்சிரு மாப்ள.நீயே ஏதோ பிரச்சனைல இருக்க போல. அது தெரியாம. சரி இப்போ சொல்லு, எதாவது திங்க கொண்டு வந்தியா..."
"ஒன்னும் கொண்டு வரல. வா வெளிய போலாம். என் treat. "
"பிஞ்சமண்டயன்...பிஞ்சமண்டயந்தாண்டா .."
ரவியும் இப்பொழுது சிரித்துவிட்டான்.

சாப்பிட்டு முடித்து இரவு பேசிகொண்டிருந்தோம்.
"ரவி...கொஞ்சம் யோசிச்சு பார்க்கும்போது, நீ என் உன் முடிக்கு எதாவது பண்ண கூடாதான்னு தோணுது.."
"என்னடா பண்ண முடியும் இனிமே..?"

அடுத்த மூன்று மாதம் மூலிகை சிகிச்சையில் புகழ் பெற்ற ஒரு நிறுவனம் சென்றோம். ஒன்றும் பலனில்லை.
அடுத்த மூன்று மாதம் ஹோமியோபதி. பலனில்லை.
வெளிநாடு மருந்து. உள்ளூர் மருந்து. சுத்தமாய் பலனில்லை.

"டேய்..பிஞ்சமண்டயா....இப்படி எல்லாம் பண்ணி அந்த பொண்ண ஏமாத்தலாம்னு பாக்குறியா".
என்னை தவிர யாருக்கும் அன்று நடந்த விஷயம் தெரியாது. ரவி அவர்களிடத்தில் சொல்லவில்லை. கூடிய சீக்கிரம் திருமணம் என்று மட்டும் சொல்லிவைத்தான்.

இதற்கு நடுவேதான் ரவிக்கு இன்னொரு வரன் வந்தது. ரவி மீண்டும் பயந்தான். சரியான புகைப்படம் அனுப்பபட்டுலதா என சரி பார்த்தான்.

அந்த பெண்ணுக்கு இவனை மிகவும் பிடித்து போனது. ரவி மீண்டும் மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்றான்.

"மாப்ள...இது வரைக்கும் நான் பார்த்ததில இந்த மாதிரி ஒரு அழகான, அறிவான பொண்ண பாக்கலாடா."

அந்த பெண் பாண்டிச்சேரியில் வேலை செய்தாள். கிட்டத்தட்ட அந்த பெண்ணை இவன் காதலிக்க தொடங்கிவிட்டான். நல்லா படியாக நிச்சயம் முடிந்தது. திருமணம் இன்னும் ஒரு ஆறு மாதத்தில் என முடிவானது.

ஒரு முறை அவளுடைய தோழி திருமணத்திற்கு அந்த பெண் சென்னை வரவேண்டிய சூழல் வந்தது. தோழி இவனையும் அழைத்துள்ளதாக சொன்னால். இது வரை அந்த பெண்ணின் தோழிகள் இவனை பார்த்தது இல்லையாம்.

அந்த பெண்ணோடு தொலைபேசியில் இது சம்பதாமாய் உரையாடிக்கொண்டிருந்தான் .
"கண்டிப்பா வரணுமா...?"
"...."
"இல்ல லீவுதான்..."
"...."
"சரி வரேன்."
"......"
"ஹ்ம்ம்....சொல்லு. எதாவது வாங்கிட்டு வரணுமா..?"
"......"
"வேற என்ன சொல்லுமா. என்ன தயக்கம்..?"
"................."
"அப்டியா.....?!?!......சரி.....நான் முயற்சி பண்றேன்."

நான் எல்லாம் கேட்டு கொண்டிருந்தேன்.
"என்ன மாப்ள. என்ன வேணுமா அவங்களுக்கு..?"
"இந்த Hair transplant பத்தி உனக்கு ஏதும் தெரியுமா மாப்ள..?"

Tuesday, April 14, 2009

கதை - 4

Share |
வெள்ளிகிழமை எற்பாடு
என்னுடைய அடுத்த கதை இதைப்பற்றித்தான் என முடிவு செய்தேன். ஆனால் கற்பனைக்காக பொய் சொல்ல வேண்டியது வருமோ என்பதால் தொடர்ந்து எழுத முடியவில்லை. இருப்பினும் வேறு என்னதான் செய்வது..?

இந்த வாரத்தில் 5 நாளில் மொத்தமே ஒரு 20 மணிநேரம்தான் வேலை செய்திருப்பேன். விஷயம் தெரிந்தவனாக இருந்திருந்தால் நான் செய்த அதே வேலையயை 10 மணி நேரத்தில் செய்திருப்பான்.

சில நேரங்களில் உடல் கொண்டு உழைக்கும் மனிதர்களை நினைத்து பார்க்கும்போது எனக்கு வெட்கி தலை குனிய தோன்றும். ஒரு விவசாயி சுமார் 10 முதல் 12 மணி நேரம் வேலை பார்த்தால் அவரின் தினக்கூலி என்னவாய் இருக்கும்..?

கடலுக்குள் சென்று கரை மீள்வோமோ இல்லையோ என்று தெரியாமல் தவிக்கும் ஒரு மீனவனுக்கு தினம் மீன்கலாவது கிடைக்குமா..?
எல்லை காக்க தன்னுயிர் இழக்கிறானே ராணுவ வீரன் அவன் வாங்கும் குண்டுகளுக்கு ஏதேனும் விலை உண்டா..?

ஏன்..?? நான் நன்றாய் படித்தேன்...இல்லை கல்லூரி சென்றேன் என்ற ஒரே காரணத்திற்காக எனக்கு இவ்வளவு ஊதியமா..?

அவ்வளவு உதாரணங்கள் ஏன்.? எனக்கு கீழே அங்கே இந்தியாவில் பணி புரிகிறார்களே அவர்கள் கூட கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். ஏன்..? நானே ஒரு காலத்தில் 24 மணி நேரங்கள் தாண்டியும் உழைத்துள்ளேன்.

எல்லாம் இருந்தும்...இந்த கேள்வி என்னை உறுத்துகிறது.


வெள்ளிக்கிழமை மாலை
யோசித்ததை எழுதலாம். ஆனால் வெள்ளிகிழமை மாலை பொழுதேன்பது ஏக்கங்களுக்காக எழுதப்பட்ட மாலை பொழுது. தேவையில்லாத/தேவையான கேள்விகளுக்காக பொழுது. மாலை முடிந்து இரவு எப்பொழுது வந்ததென தெரியாமல் கழியும் பொழுது. என்ன செய்தேன் என்பதை யோசிப்பதை காட்டிலும் அந்த பொழுது கழிந்தாலே போதும் என நினைப்பேன்.


வெள்ளிக்கிழமை யாமம்
ஏதோ படம் பார்த்தேன். ஏதோ படித்தேன். பொழுது கழிந்தது.


வெள்ளிகிழமை வைகறை
உறங்க சென்றேன். அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறைதான். என்ன செய்து கிழித்தேன்.?! இரண்டு நாள் விடுமுறைக்கு. நாளை சுமார் ஒரு 10 மணிக்கு எழுந்தாலும் எழுதிவிடலாம். தூங்கிப்போனேன்.ஏதேதோ கனவுகள்.


சனிக்கிழமை காலை
கணிப்பொறி துறையில் உற்பத்தி அனுசரணையாளர்களுக்கு (Production Support) வழங்கப்படும் 'விளிப்பு' கருவி (Beeper) என்னையும் விழிக்க செய்தது.

"Fourtimes SQL Job failed"

மிக சரியாக சொல்ல வேண்டுமேயானால் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் பிழை என்னை சார்ந்தது அன்று. வேறு ஒரு இலாகாவினர் பார்க்க வேண்டியது. ஆனாலும் உலகத்தில் உள்ள யாவும் ஏதோ ஒருவகையில் ஒன்றோடு ஒன்று சம்பதப்பட்டிருப்பதுபோல இந்த பிரச்சனையும் என்னோடு சம்பதபட்டிருந்தது.

அந்த இலாக்காவினரை கைபேசியில் அழைத்தேன். எல்லோருமே தூங்கி கொண்டிருந்தார்கள். இரவு வேலை செய்திருப்பார்கள் என தோன்றியது. அதுதான் இந்த பிழைக்கு காரணமாய் இருக்கலாம்.

எல்லோரும் பதறினார்கள். அந்த இலாகாவின் உயர் அதிகாரி எல்லோரையும் தொலைபேசியில் அழைத்தார். நானும் அந்த தொலைபேசி அழைப்பில் பங்கெடுக்க வேண்டிய கட்டாயம் உருவானது.


சனிக்கிழமை நண்பகல்
எல்லோரும் பேசினார்கள். என்ன பிரச்சனை என்று யூகித்தார்கள். என்னால் என் தொலைபேசியை துண்டிக்க முடியவில்லை. ஒரு வழியாக நண்பகல் 12 மணிக்கு இதுதான் பிரச்சனை என்று கண்டுபிடித்தார்கள். அவர்கள் ஒரு அரை மணி நேரத்தில் அதனை திருத்தி விட்டு என்னை அழைப்பதாக சொன்னார்கள்.

நான் நிம்மதி பெரு மூச்சுவிட்டேன். 4 மணி நேரமாய் பல் கூட துலக்காமல்......கைபேசியை மின்சாரம் வசம் ஒப்படைத்துவிட்டு காலை கடன் முடிக்க சென்றேன்.

நான் திரும்பி வரவும் என் கைபேசி அடிக்கவும் சரியாய் இருந்தது. அவர்கள் வேலை முடிந்ததாம். என் வேலையே சீக்கிரம் முடிக்க உத்தரவிட்டார்கள்.

நான் முடித்துவிட்டு அழைப்பதாய் சொன்னேன். அவர்கள் தொலைபேசியில் காத்திருப்பதாய் சொன்னார்கள். மேலும் நான் செய்கின்ற வேலையினால் வேறு ஏதேனும் பிரச்சனை இல்லை என்பதையும் அவர்கள் உறுதி படுத்த வேண்டுமாம்.

ஒரு 1 மணி நேரம். எல்லாம் முடிந்தது.

பசியில் தலை வலித்தது. ஒரு குளம்பி குடித்தால் நன்றாய் இருக்கும் என தோன்ற குளம்பி கலக்கி வந்து என் கணிப்பொறியை அணைக்க போனேன்.
ஒரு மின்னஞ்சல்:

"Doc Upload Error-Cannot Connect to DB-2147467259[Microsoft][ODBC SQL Server Driver][DBNETLIB]General network error."

ஆ.......இது வேறு பிரச்சனை. என் பிரச்சனை. புரியாத வார்த்தைகளாய் தோன்றினாலும் எனக்கு தெரிந்த பிரச்சனைதான். வழங்கி படுத்துவிட்டது. (server down). ஏன்..?

என் மேலதிகாரிக்கு தொலைபேசி முயற்சி செய்தேன். அவர் எடுப்பதாய் தெரியவில்லை.

இது சம்பதமான கணிப்பொறி உள்கட்டமைப்பு குழுவினருக்கு கூப்பிட்டேன். சனிக்கிழமை என்பதால் ஒரு அரை மணி நேரம் கழித்தே இணைக்கப்பட்டேன்.

அவர்கள் முயற்சி செய்து பார்த்து என்னை அழைப்பதாய் சொன்னார்கள்.


சனிக்கிழமை எற்பாடு
ஆறிப்போன குளம்பி குடித்து முடித்தேன். அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது.

சில விபரம் அவர்களுக்கு தேவையாய் இருந்தது. எல்லாம் சொன்னேன்.கருவிக்கு வயதான காரணத்தால் அது பழுதடைந்துள்ளது என்பதே அவர்கள் கண்டறிந்த உண்மை. பழுதடைந்த கருவியை அவர்கள் இடத்தில் இருந்து அவர்களாலும் இணைக்க முடியவில்லை.

இப்பொழுது என்ன செய்ய வேண்டும். அந்த கருவி இருக்கும் அலுவலகம் செல்ல வேண்டும். இன்று விடுமுறை ஆன காரணத்தினால் அவர்களிடத்தில் பணியாளர்கள் குறைவாகவே இருந்தார்கள்.

என்னை உடனடியாக கிளம்பி அந்த அலுவலகம் போக சொன்னார்கள். அவர்கள் அங்கிருந்து சொல்ல சொல்ல நான் செய்ய வேண்டும்.
பசி இப்பொழுது அதிகமானது. அலுவலகம் கிளம்பினேன். என் வீட்டில் இருந்து 70 மைல்.

எல்லாம் முடித்து வீடு திரும்பும்பொழுது சனிக்கிழமை மாலை வந்திருந்தது. இப்பொழுது பசி இல்லை. தூக்கமும் வருவதாய் தெரியவில்லை.

திங்கட்கிழமை காலை
யோசித்ததை எழுதி முடித்தேன். பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.

Tuesday, April 7, 2009

கதை - 3

Share |
அமெரிக்காவில் வர்த்தக நெருக்கடி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

நவம்பர் 30 2008(1)
அமெரிக்கா கடந்த ஒரு வருடமாக வர்த்தக நெருக்கடியில் இருப்பதாய் அமெரிக்க தேசிய பொருளாதார ஆராய்ச்சி குழு அறிக்கை வெளியிட ஆயத்தமானது.

நவம்பர் 30 2001(1)
இதே தினம்தான் நான் பார்த்து கொண்டிருந்த கணிப்பொறி வேலையில் இருந்து நீக்கப்பட்டேன். வேலைக்கு சேர்ந்து சரியாக மூன்றாவது மாதம்.

செப்டம்பர் 11 2001(1)
இன்னுமொரு வர்த்தக நெருக்கடியை சிலர் துவக்கி வைத்த தினம்.

செப்டம்பர் 1 2001(1)
புதிய வேலை. நான் சிரமப்பட்டு படித்த படிப்பிற்கும் நான் பார்த்த பகுதி நேர வேலைகளுக்கும் பதில் கிடைத்த தினம். என் மொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியை நான் பகிர்ந்து கொண்ட தினம். இதுவரை நான் படிப்பிற்காக வாங்கிய கடன் எல்லாம் இனி காற்றாய் கரைந்து போகும் என கனவு கண்ட தினம்.

செப்டம்பர் 1 1999.
இன்றுதான் என் முதுகளை படிப்பு தொடங்கியது. ஒருபுறம் பிரிவு வாட்ட மறுபுறம் ஆயிரமாயிரம் கனவுகளை சுமந்து என் அமெரிக்க கல்லூரியில் காலடி எடுத்து வைத்தேன். வெவ்வேறு நாட்டினர். முற்றிலும் புதிய முகங்கள். வேறு மாதிரியான உலகம். ஆரம்பகால நட்பிற்கு இந்திய மாணவர்கள்.எல்லா கஷ்டங்களையும் போக்க ஐந்தாறு கடன் அட்டைகள்.

அமெரிக்க படிப்பிலே பாரட்டப்பட வேண்டிய ஒரு விஷயம் - பகுதி நேர வேலை வாய்ப்பு. குறிப்பாக என்னை போன்ற ஏழைகளுக்கு. கல்லூரி வளாகத்திலேயே பலருக்கும் வேலை கிடைக்கும். கிடைக்காத சிலர் வெளியில் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த சிலரில் ஒருவர் ஆனதால் எனக்கு முதலில் கிடைத்த வேலை கழிவறை சுத்தம் செய்தல். மகிழ்ச்சியாய் செய்தேன். நான் வாங்கும் முதல் சம்பளம்.

பகுதி நேர வேலை வாய்ப்புகள் என் இந்திய வீட்டின் பசியையும் அவ்வபோது அடைத்தது. காசு கொடுத்து உதவிய அக்கம் பக்கத்தினருக்கும் பதில் சொல்லியது.

பகுதி நேர வேலையே இப்படியென்றால் இன்னும் இரண்டு வருடங்களில். வர போகும் வசதியை நினைத்து நினைத்து எல்லா எண்ணங்களையும் சேர்த்துவைத்தேன்.

நன்றாய் படித்தேன். படித்தவுடன் வேலையும் கிடைத்தது. கல்லூரி விட்டு வெளியே வந்த உடனேயே எங்களை கொத்திசென்றது கணிப்பொறி வேலைகள்.

செப்டம்பர் 1 2001(2)
நான் வேலைக்கு சென்ற நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை கொண்டது. நல்ல விதமான மேலதிகாரியும் அமைந்தார். நான் இருந்த ஊரில் அரசு போக்குவரத்து அவ்வளவாக இல்லாத காரணத்தினால் ஒரு வாகனம் வாங்க வேண்டியது கட்டாயமானது. என் மேலதிகாரியின் வற்புறுத்தலில் ஒரு புதிய வாகனமும் வாங்கினேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் கண்ட கனவுகள் நினைவுகளாய் மாற துவங்கியது.

மதிய உணவை பெரும்பாலும் என் அலுவலக சிற்றுண்டியில்தான் அருந்தினேன். அதற்கு இரு காரணம். 1. இங்கு அமெரிக்க உணவுகள் மட்டுமே சமைக்கப்படும். இது வரை நான் அமெரிக்க உணவை ஓரிரு கல்லூரி விருந்துகளை தவிர்த்து உண்டது இல்லை. ஆகையால் சனி, ஞாயிறு தவிற எல்லா நாட்களும் இங்குதான். 2. அங்குதான் எனக்கு ஒரு நண்பர் கிடைத்தார் - சாம் - கறுப்பின நண்பர் - அங்கு அமெரிக்க உணவு வகைகளை சமையல் செய்பவர். அவருக்கு இந்தியா பற்றி தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம். சில நேரம் எனக்கு தெரியாத இந்தியா விசயங்களை கூட சொல்வார்.

செப்டம்பர் 11 2001(2)
உலகமே ஸ்தம்பித தினம். எங்கள் நிறுவனம் பெரிதாய் ஒன்றும் பாதிக்கப்படவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.
நான் சாமிடம் தினம் கேட்கும் விஷயம், எனக்காக ஒரு முறை அவர் சாதம் சமைத்து தர வேண்டும் என்பதுதான். அங்கு அமெரிக்க உணவு வகைகள் மட்டுமே செய்வதால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
நாட்கள் நகர்ந்தன. எல்லா நிறுவன பங்கு தொகைகளும் பாதாளத்திற்கு போயின. எங்கள் நிறுவனத்திலும் மாறுதல்கள் உண்டாயின.

நவம்பர் 30 2001(2)
காலை வந்த உடனே என் மேலதிகாரியிடம் இருந்து ஒரு மின்னஞ்சல்.

கடைசியாய் ஒரு முறை சாமை பார்க்க வந்தேன். சாமிற்கு விஷயம் தெரிந்திருந்தது. எனக்காக சாதம் செய்திருந்தார். என்னால்தான் உணவருந்த முடியவில்லை.

என்ன செய்வேன்???? என் நிறுவனமே இப்படி என்றால் இனி எந்த நிறுவனம் என்னை போன்ற பலரை வேலைக்கு அமர்த்தும். பகுதி நேர வேலை கூட இனி கிடைக்குமா என்பது சந்தேகம்.

வந்த மூன்று மாத சம்பளமும் என் கடன் அட்டைகளை அடைக்கவே சரியாய் போனது.

எப்படி என் இளங்கலை பட்ட கடன் அடிப்பேன். முதுகளை..? வந்த நாள் முதல் வீட்டிற்கு பணம் கொடுத்தேனே. இப்பொழுது எங்கே போவேன்..? எப்படி அவர்களிடத்தில் புரிய வைப்பேன். எனை நம்பி என் தங்கை திருமணம்.

மயக்கம் வந்தாற்போல் இருந்தது. சாம் என் பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்தார். சாமை போய் சமையலை கவனிக்குமாறு சொன்னேன். இன்னும் நேரம் இருக்கிறது என்றார். காலையிலே வேலை போனதால் நாந்தான் சீக்கிரம் வந்துள்ளேன்.
"இன்னும் நேரம் இருக்கிறது."

"சாம்.....எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா..?"
"என்ன வேண்டும்? கேள்..."

"உங்கள் அடுக்களையில் என்னை ஒரு அரை மணி நேரம் அனுமதிப்பீரா..?"
"ஏன்.? உனக்கு என்ன வேண்டும்...? நான் செய்கிறேன்.."

"இல்லை. என்னை அனுமதிப்பீரா....ஒரு அரை மணி நேரத்தில் வருகிறேன்."
சாம் என்னை கூப்பிட கூப்பிட அங்கிருந்து கிளம்பினேன்.

திரும்பி வந்த நான் நேராக சாமின் அடுக்களையில் நுழைந்தேன். அடுத்த இரண்டு தினங்களுக்காக எனக்காக ஊற வைத்திருந்த சுண்டலை கையோடு எடுத்து வந்தேன். கூடவே பூண்டு, சீரகம், மஞ்சள் பொடி, கொஞ்சம் கொத்தமல்லி, இஞ்சி, கரம் மசாலா மற்றும் சில பச்சை மிளகாய்கள்.

"என்ன செய்கிறாய் நீ..? என்ன இதெல்லாம்.."
"சாம். கவலைப்படதீர்கள். எனக்கான இந்த உதவியை மட்டும் செய்யுங்கள்."

"எனக்கு ஒன்றும் புரியவில்லை. மற்றவர்கள் பற்றி எனக்கு கவலை இல்லை. அனால் நீ என்ன செய்கிறாய் என்று சொன்னால் நன்றாய் இருக்கும்"
"சொல்கிறேன். இந்த சுண்டலை கொஞ்சம் வேக வைப்பீர்களா..?"

நான் வெங்காயம், தக்காளி, மற்றும் பூண்டு நறுக்கி தனியாக வைத்தேன். இன்னுமொரு சிறிய கூஜாவில் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வைத்தேன். இன்னொரு கூஜாவில் இஞ்சி நறுக்கி வைத்தேன்.

20 நிமிடத்தில் சாம் சுண்டல் வேக வைத்து கொடுத்தார். ஒரு பாத்திரம் வாங்கி முதலில் வெங்காயம், பூண்டு எண்ணையில் போட்டு வதக்கினேன். வெங்காயத்தின் நிறம் மாறிய பின் கொத்தமல்லி, சீரகம் மற்றும் மஞ்சள் பொடி சேர்த்தேன். இரண்டொரு நொடியில் தக்காளி சேர்த்தேன்.

தக்காளி கொஞ்சம் நிறம் மாறிய பின் வேக வைத்த சுண்டலை சேர்த்தேன். தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு, கரம் மசாலா, கொஞ்சம் எலுமிச்சை சாறு ஊற்றி ஒரு பத்து நிமிடங்கள் சமைத்தேன்.

"சாம்....கொஞ்சம் ருசி பாருங்கள். காரம் தேவைபட்டால் இந்த பச்சை மிளகாயையும், இஞ்சியையும் சேர்த்து கொள்ளுங்கள்..."
சாம் ருசி பார்த்தார். அவர் கண்களிலேயே சுவை தெரிந்தது.

"எனக்காகவா இவ்வளவும் செய்தாய்..?"
"சாம்...நான் உங்களிடம் ஒரு உதவி கேட்டேனே.."
"?!"

இந்த உணவை மற்ற உணவோடு பரிமாற ஒரு வழியாக சாமை சம்மதிக்க வைத்தேன். எனக்காக அவர் சமைத்த சாதமும் அங்கு வைக்கப்பட்டது.

"சாம். எல்லோரும் சாப்பிட வர இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது.?"
"ஏன்..?"

கீழே கிடந்த சில அட்டைகள் எடுத்தேன். அதற்கு மேல் வெள்ளை தாள் ஒட்டி "இன்றைய சிறப்பு உணவு - இந்திய சன்னா மசாலா" என எழுதி வைத்தேன்.
நிறைய கேள்விகள் சாமிடம். முக்கியமான கேள்வி - இது தினம் கிடைக்குமா.?

சாம் என்னை உணவக நிறுவனரிடம் அழைத்து சென்றார். எத்தனை தினங்களுக்கு இந்த வேலை உனக்கு வேண்டும் என்றார்.

"நான் இங்கேயே இன்னொரு உணவகம் ஆரம்பிக்கும்வரை. கவலை கொள்ளாதீர்கள். இந்த நிதி நெருக்கடி முடிந்து இங்கே நிறைய இந்தியர்கள் வருவார்கள். இன்னொரு நிதி நெருக்கடி வரும்போது கூட நம்மால் சமாளிக்க முடியும்.."

நான் மாணவனாக விடுபட்டு 3 மாதங்களே ஆன காரணத்தால் அப்பொழுது விசா பிரச்சனை ஏற்படவில்லை. ஒரு வருடத்தில் அவரே எனக்கான விசா ஏற்பாடு செய்தார்.

எட்டு வருடங்கள். எல்லா கடனையும் அடைத்து எனக்கான ஒரு வீடும் இந்தியாவில் வாங்கிவிட்டேன். இடையே என் தங்கையின் திருமணமும் என் திருமணமும் முடிந்து நானும் என் மனைவியும் எங்கள் புதிய உணவகத்தை பார்த்துகொள்கிறோம். என் அனைத்து மகிழ்ச்சியான தருணத்திலும் சாம் என்னுடன் சேர்ந்து இருந்தார். என் திருமணம் போது அவருக்கு என்னுடன் இந்தியா வந்ததில் பெரு மகிழ்ச்சி. தன் கடைசி காலங்களை அங்குதான் கழிப்பேன் என்று உறுதி பூண்டார். அவர் இந்தியாவில்தான் இறைவனை உணர்ந்தாராம்.

நவம்பர் 30 2008(2)
இந்த முறை ஏற்பட்ட வர்த்தக நெருக்கடியில் எங்கள் நிறுவனமே மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என் பழைய உணவக நிறுவனரிடம்தான் சாம் இன்று வரை வேலை செய்தார்.

நான் போகும்போது சாம் யாருடனோ பேசிகொண்டிருந்தார். என்னை பார்த்ததும்,"இவனும் உன்னை போல்தான். வந்த 3 மாதங்களில் வேலை போனது."

"சாம்.....கிளம்புவோமா...?" என்று கேட்டுக்கொண்டே அவனை உற்று நோக்கினேன்.
"இன்னும் நேரம் இருக்கிறது" என்றார்.
அவன் தனக்குள் "இன்னும் நேரம் இருக்கிறது" என்று முனுமுனுத்தான்.

Thursday, April 2, 2009

பதிவு தலைப்பு - ஒரு சிறு விளக்கம்

Share |
என்னுடைய பதிவு தலைப்பை பற்றி நிறைய பேர் கேட்டிருந்தார்கள். அதற்கான அர்த்தம் என்ன, இதன் மூலம் நான் ஏதேனும் சொல்ல வருகிறேனா, இது ஏதேனும் சங்க பாடலா...இது போன்ற கேள்விகள்.

யாயும் யாயும் யாரகியரோ (ஆங்கிலம் மற்றும் தமிழ்) என்பதை வலையில் தேடியிருந்தால் நான் சொல்லும் விளக்கத்தை விட வேறு சிறப்பான விளக்கங்கள் கிடைத்திருக்கக்கூடும். எனினும் இதன் விளக்கத்தை கூறுவது எனது கடமையாகிறது.

முதலில் பாடல்:
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.
(குறுந்தொகைப் பாடல் எண் நாற்பது. ஆசிரியர் செம்புலப்பெயனீரார்.)

இது குறுந்தொகை பாடல் என்றும், இதன் ஆசிரியர் பெயர் அறியபடாத காரணத்தினாலும், அவர் பாடலில் உபயோகித்திருக்கும் (4 வது வரி) 'செம்புலப் பெயல்நீர்' அவருடைய பெயராக உருவாகியுள்ளது.

விளக்கம்:
பாடல் விளக்குவதற்கு முன்....சில வரிகளை பார்த்த உடனையே நம் மனது, "ஓ....தூய தமிழா, அப்ப நமக்கு புரியாது" என நினைக்கிறது. அதனை தயவு செய்து உடையுங்கள். இந்த பாடலையே கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

யாயும் யாயும்.... (இன்றும் நம் ஊர்களில் அன்னையை நாம் 'ஆயி' என்று அழைப்போம்).
யாராகியரோ (நான் விளக்க வேண்டுமா..?)
எந்தையும் (எந்தயிலே ஒரு தந்தை வந்தாரா..)
கேளிர் ( இதற்கு அர்த்தம் தேவைப்படலாம் - கேளிர் - உறவு கொண்டவர்)
யானும் நீயும் (உங்களுக்கு புரியும்)....
செம்புலம் (சிவந்த நிலம்)பெயல்நீர் (மழை நீர்)
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே (உங்களுக்கு பாடல் புரிந்துவிட்டது..)

"என் தாயும் உன் தாயும் எவ்விதத்திலும் அறிந்தவர் இல்லை. என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவு கொண்டாருமிலர். நானும் நீயும் இதுவரைகாலம் ஒருவரை யொருவர் முன்னறிமுகம் எனவும் ஆயிலேம், எனினும் என்ன வியப்பு, நம் இருவருடைய இதயங்களும் சிவந்த நிலத்தில் பெய்த மழைநீர் எங்ஙனம் உருமாறி பிரித்தறிய வொண்ணாதபடி, மண்ணின் தன்மையை அடைந்து விடுமோ அதுபோல ஒன்று கலந்து விட்டன"
(மூலம் : திண்ணை.காம்)

இது தலைவன் ஒருவன் தன் காதலை தலைவியிடம் சொல்வதுபோல் பெரும்பாலும் அறியப்பட்டுள்ளது.

நான் "அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே" என்பதை "அன்பு கொண்ட எல்லா நெஞ்சங்களும் ஒன்றாய் கலக்கும்" எனவே பார்க்கிறேன்.
எல்லோர் நெஞ்சிலும் கண்டிப்பாய் இருப்பது அன்பு ஒன்றே. காதல் ஒருவரிடம் மட்டும்தான் செய்ய முடியும். அன்பை எல்லோரிடமும் பகிரலாம். அன்பு செய்யுங்கள்.
"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்...."

பி.கு : ஏதேனும் பிழையிருந்தால் சுட்டிகாட்டவும். நன்றி.

Wednesday, April 1, 2009

கதை - 2

Share |
எங்களின் அலுவலகம் வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்படுவதாய் அறிவிப்பு வந்தது. இப்பொழுது இருக்கும் அலுவலகத்தில் இருந்து 13 மைல் தூரம்.

நான் மைல் கணக்கு சொல்லும்பொழுது உங்களுக்கு ஏதேனும் தோன்றினால் நீங்கள் இந்திய வாசகராய் இருத்தல் வேண்டும். அமெரிக்க வாசகர்களுக்கு ஒன்றும் தோன்றாது.

இது குளிர் காலம் வேறு. அமெரிக்க குளிரை நீங்கள் நேரில் பார்க்க வேண்டும். அது வரை உங்களால் நிட்சயம் நம்ப முடியாது.முதல் முறை நான் பனி பார்த்தபோது மிக அதிசயமாய் இருந்தது. இது சாத்தியமா என கூட தோன்றியது.
இந்திய நண்பன் ஒருவன் டார்ஜீலிங்-ல இல்லாத பனியா..? என்றான்.
என் அறை நண்பன் , "டேய் ...இத என்னத்த வேடிக்க பாக்குற ..." என்றான். இது உண்மை எனும்போது "குளிர் கொடுமை" உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.

அமெரிக்கா வந்த உடனே எல்லோரும் செய்யும் முதல் வேலை ஒரு மகிழுந்து (தேவநேய பாவாணர் தமிழ்) வாங்குவதுதான்.

"நம்ம ஊர் மாதிரி இல்ல, இங்க வண்டி ஓட்றது ரொம்ப ஈசிடா...."

"ஊர்ல டூவீலர் ஓட்டுவியா...?"

"இங்க கியர் கிடையாது தெரியும்ல..."

"வண்டி இல்லாம ஒன்னும் பண்ண முடியாது..."

"இங்க அரசு பேருந்தெல்லாம் கிடையாது. இதெல்லாம் அமெரிக்கா அரசியல்.....எல்லோரும் கார் வாங்கனும்னு செஞ்ச சூழ்ச்சி. கார் வித்தாதான் பெட்ரோல் விக்க முடியும். பல பெட்ரோல் கிணத்துக்கு சொந்தகாரங்க இந்த ஊர் அரசியல்வாதிங்க..." இதென்ன பெட்டி செய்தியா..?!

என்னை மகிழுந்து ஓட்ட வைக்க நண்பர்கள் எடுத்த முயற்சி எல்லாமே தோற்றுபோனது, அமெரிக்க அரசியல் உட்பட.

நல்ல விதமாக என்னுடைய வீடு என் அலுவலகத்தின் பக்கத்தில் இருந்ததால் அவர்களை பார்த்து நான் ஏளனம் செய்ததுதான் அதிகம்.

"டேய்.....எந்த பணக்கரானவது மகிழுந்து ஓட்டுவானா...?"
ஒன்றும் புரியாத நண்பன், "டிரைவர் வெச்சிருப்பாங்க அவங்கெல்லாம்.."

"பாரு..இப்பவே ஒரு பயபுள்ள தயாரா இருக்கான்.."
"பேசு மகனே...பேசு...ஒரு நாள் நீ கார் ஓட்ட வேண்டிய கட்டாயம் வரும்...அன்னைக்கு யார் மேலயாவது மோதி 'மாப்ள என்ன காப்பதுங்கடான்னு பொலம்புவ...அன்னைக்கு தெரியும்.." புரிந்தவன் சாபமிட்டான்.

"இவனுக்கு யாராவது பழரசம் கொடுங்கப்பா...கஷ்டப்பட்டு வசனம் பேசிருக்கான்"


நண்பர்கள் விட்ட சாபம் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. நான் மட்டுமே தூரமான அலுவலகத்திற்கு மாற்றபட்டேன். 13 மைல்.

ஒரு வழியாக நானும் ஓட்ட கற்றுக்கொண்டு (மூன்று முறை கூடுதல் சிறப்பு பயிற்சு பெற்று) ஒரு மகிழுந்தும் வாங்கினேன். என் முன்னை போல் இருவர் வேறு என்னுடன் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் இப்பொழுதுதான் கற்றுகொள்கிரார்களாம்.

"என்னையும் இந்த உலகம் நம்புதே..."

நீண்ட தூரம் செல்ல வேண்டி இருப்பதால் நான் சீக்கிரமே கிளம்பினேன். இருவரில் ஒருவரும் சீக்கிரம் கிளம்பி இருந்தார். இன்னொருவரை தொலைபேசியில் அழைத்தால், "பாஸ், சுத்தமா மறந்துட்டேன்....ஒரு 2 மினிட்ஸ் கொடுங்க..."

2 நிமிடம் 20 நிமிடம் ஆனது.
"மொத தடவ வண்டி ஓட்டறேன். கொஞ்சம் மெல்ல ஓட்டலாம்-நு நெனச்சேன். இப்பவே நேரமாயிடுச்சு..."
வண்டி கிளம்பியது. "கோச்சுகாதீங்க பாஸ். உங்களுக்காக நல்ல பாட்டு போடறேன் என் i-pod வழியா..."

நான் ஒன்றும் சொல்லவில்லை. வண்டியின் பாட்டு கருவியை ஏதோ செய்து கொண்டிருந்தார்.


நான் சென்ற பாதை தோறும் சிகப்பு விளக்கு குறிப்புகள் வேறு. வேகமாக போகவும் கொஞ்சம் பயம் இருந்தது. அவர் தொடர்ந்து ஏதோ செய்து கொண்டிருந்தார். "யோவ் என்னையா பண்ற..?"
திடீர் என பாட்டு அதிர.... நான் என் முன் சென்ற வண்டியை மோதிவிட்டேன். முன்னே சென்ற வண்டி சரியாக குறிப்பின் கீழ் போய் நின்றது.
"பாஸ்....என்ன பண்ணிடீங்க..."

என்ன செய்தேன் என புரியவில்லை. வண்டியின் நிறுத்த கருவி இயங்கவில்லை எனதான் முதலில் நினைத்தேன்.

அதற்குள் முன் இருந்தவர் இறங்கி வந்தார். தன் வண்டிக்கான சேதம் பார்த்தார். அவரின் கோபம் அவர் கண்களில் தெரிந்தது.

நான் இறங்கி முதலில் மன்னிப்பு கேட்டேன். அவர் என்னை மதிப்பதாய் தெரியவில்லை.

நான் என் நண்பனை கூப்பிட்டேன். "யாருக்கும் எதாவது அடிபட்டுச்சா..?""இல்லடா அவங்க வண்டிக்கும் என் வண்டிக்கும்தான் சேதம்.."

நண்பன் குபீர் என சிரித்தான். "மாப்ள எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா...? நான் விட்ட சாபம் பார்த்தியா..?"
"டேய்...அத பேச இதுவா நேரம்..."
"இப்பதாண்டா பேசணும்..உன்ன மாதிரி ஆளுங்கல்ட.."
"டேய்...என்ன பண்ணனும்னு சொல்டா..."

அதற்குள் இன்னொருவன் கைபேசியை பிடுங்கி,"அவனே சீரியஸா கேட்டுட்டு இருக்கான்..அவன்ட்ட போய்...""டேய் ..911 கால் பண்ணு. மாமா வந்து உன்ன அரஸ்ட் பண்ணுவார். வண்டிய சீஸ் பண்ணுவார்" என சொல்லி சிரிக்க ஆரம்பித்தான்.
"டேய்..என்னடா சொல்ற..?""ஆமாண்டா லைசென்ஸ் இப்பதான் வாங்கி இருக்க....கண்டிப்பா attempt murder கேஸ்தான்."

ஒரு வழியாக என்ன செய்ய வேண்டும் என புரிந்து முடிப்பதற்குள் அவரே காவல் துறையை அழைத்திருந்தார். நண்பர்கள் சொல்லிய மற்றவை விளையாட்டாக இருந்தால் கூட செய்த தவறுக்கு கண்டிப்பாக அபராத தொகை கட்டவேண்டிவரும். வந்த காவலர் நமக்கு வழங்கும் புள்ளியை வைத்து அது முடிவாகுமாம். மேலும் நான் இடித்த அந்த வண்டிக்கும் நான்தான் செலவு செய்ய வேண்டும்.

காவலர் வந்தார். பக்கத்தில் இருந்தவர் கீழே இறங்க போனார். "யோவ். எங்க போற..?"

"இல்ல போலீஸ் வர்றார். மரியாத இல்லாம உட்கார்ந்துகிட்டு..."
"சீ...உட்கார்ந்து இருக்கை வார் போடு.."

"வந்துட்டார்யா map போட" இது இன்னொருவர்.
திரும்பி ஒரு முறை முறைத்தேன்.அபராத தொகையை இவர்கள் தலையிலும் கட்ட வேண்டும் என முடிவு செய்தேன்.அது கூட பரவா இல்லை. புதிதாக வண்டி ஓட்டுபவன் என்பதால் வேறு ஏதேனும் பிரச்சனை வருமா..? உரிமம் ஏதேனும் ரத்தானால் என்ன செய்வது..? கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

வந்த காவலர் முதலில் யாருக்கேனும் காயம் உள்ளதா என வினவினார். பின்பு அந்த வண்டிகாரரையும் வினவிமுடித்து...வண்டியை கொஞ்சம் ஓரமாக நிறுத்த சொன்னார்.

விசாரணை தொடங்கியது.
"முன்னே சென்ற வண்டிக்கும் என் வண்டிக்குமான தூரம் திடீர் என குறைந்தது. நான் மோதிவிட்டேன்."
"நீங்கள் மோதும்போது சிக்னல் என்ன நிறத்தில் இருந்தது..?"

"சிகப்பு..இல்லை பச்சை இல்லை...மஞ்சள்.." என்ன விளக்கு என்பது எனக்கு உண்மையில் நினைவில்லை.
"மஞ்சள்?"
"ஆம்"

இதே போல் அங்கும் விசாரணை நடந்தது. மீண்டும் காவலர் வந்தார். தன் அட்டையை வழங்கி இன்னும் இரண்டொரு நாளில் வந்து அறிக்கை பெற்று கொள்ள சொன்னார். மேலும் குற்றம் செய்தது அவர் என்பதால் எங்களை மன்னிப்பதாகவும் சொன்னார்.

என்னது..?!

அவரிடம் விசாரிக்கும்போது, அந்த வண்டி ஓட்டுனர் விளக்கின் நிறம் பட்சையாய் இருந்தது என கூறி உள்ளார். அதற்கு காவலர் பட்சையாய் இருக்கும்பொழுது வண்டியை நிறுத்தியது உங்கள் குற்றம். நீங்கள் நிறுத்தியதால் பின்னால் வந்த வண்டிக்கு ஆபத்து விளைவித்து இருக்கிறீர்கள் என அவருக்கு அபராத தொகை கட்ட சொல்லிவிட்டாராம்.

எனக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. கைபேசியை எடுத்தேன்.
"மாப்ள....உரிமம் ரத்தாயிடுச்சு ..."
"லைசென்ஸ-அயே கான்செல் பண்ணிட்டாங்களா..? இது கொஞ்சம் ஜாச்திதாண்டா..."

"இல்லடா தப்பு நாந்தான் பண்ணேன்-நு காவலர் கண்டுபிடிச்சிட்டார். ரொம்ப கஷ்டமா இருக்குடா. உங்கள எல்லாம் எவ்ளோ கிண்டல் பண்ணி இருப்பேன். என்ன மன்னிசிருங்கடா."
"டேய்....சீ சீ... நீயே லைசென்ஸ் இல்லாம....இதெல்லாம் ஏன் இப்போ பேசுற.."

"மாப்ள...ஒரு .சின்ன உதவி ...நான் வண்டி ஓட்டகூடாதிள்ள . கொஞ்சம் இங்க வரீங்களா..?"

காவலர் வந்தார். 'What are you waiting for" (எதற்கு காத்திருக்கிறாய்...?)
"I am waiting for my drivers, sir" (நான் என் ஓட்டுனர்களுக்காக காத்திருக்கிறேன்)
"Drivers...!!You must be a rich guy" (ஓட்டுனர்கள்..!! நீ ஒரு பணக்காரனாய் இருத்தல் வேண்டும்).