Monday, April 27, 2009

பாகிஸ்தான் மண்ணில் தலிபான்.

Share |
நான் வாழும் ஊரில் குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்கள். இன்னொரு குழந்தையோடு விளையாடுகிறார்கள். தொலைக்காட்சி, கேளிக்கைகள், விளையாட்டு சாதனங்கள், கணிப்பொறி என்று அவர்களின் உலகம் உள்ளது. மிக சிலர் தொலைந்து போகிறார்கள்.

நான் பிறந்த மண்ணில் குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்கள். இன்னொரு குழந்தையோடு விளையாடுகிறார்கள். தொலைக்காட்சி, கேளிக்கைகள், விளையாட்டு சாதனங்கள், கணிப்பொறி என்று அவர்களின் உலகம் உள்ளது. சிலர் யாரும் இல்லாதவராய் மாற்றப்படுகிறார்கள். சிலர் சீரழிக்கப்படுகிறார்கள்.

எங்களிடம் இருந்து பிரிந்த எங்கள் சகோதர நாட்டில் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. மற்றொரு குழந்தையோடு விளையாட முடிவதில்லை. அவர்களுக்கு ஒரே புத்தகம்தான் கற்பிக்கப்படுகிறது. அவர்களுள் ஒரே எண்ணம்தான் வளர்க்கப்படுகிறது. 5, 6 வயது குழந்தைகளுக்கு நாம் பொம்மை துப்பாக்கி வாங்க யோசித்துகொண்டிருக்கும் வேலையில், நிஜ துப்பாக்கிகள் அவர்களின் கையில் திணிக்கப்படுகிறது.

பெண் குழந்தைகளுக்கு கல்வியும், வெளியுலக தொடர்பும் முற்றிலும் மறுக்கப்படுகிறது. பெண்கள் ஒரு பொருட்டாக கூட மதிக்கப்படுவதில்லை.

பிற்காலத்தில் நீ என்ன செய்ய விரும்புகிறாய் என்பது மாறி, நீ எந்த குழுவில் கொலைகாரனாக இருக்க விரும்புகிறாய் என கேள்வி எழுப்பப்படுகிறது.
மக்களின் ஏழ்மை நிலையும், அதிகாரம் படைத்தோரின் வெற்று பேச்சும் அப்பாவிகளை பினக்குவியலாய் மாற்றிக்கொண்டுள்ளது.

ஓரிடம் விட்டு இன்னொரு இடத்திற்கு மக்கள் துரத்தப்படுகிறார்கள்.

இந்த காட்சிகளில் வரும் குழந்தைகளுக்கு ஏதேனும் பேராபத்து வந்துவிடுமோ என மனம் சஞ்சலம் கொள்கிறது. பேட்டி கண்ட பெண்மணியின் துணிச்சலை தாண்டி எங்கே அவர் கொல்லப்படுவாரோ என பயம் ஏற்படுகிறது.

பார்த்துணர : http://www.pbs.org/frontlineworld/stories/pakistan802/video/video_index.html
ஆசிரியர் ஷர்மீன் நேர்முகம் :
http://www.pbs.org/frontlineworld/blog/2009/04/pakistanas_tali.html

நன்றி : http://www.pbs.org/