Thursday, April 30, 2009

அரசு (கதை - 6)

Share |
ஏப்ரல் 26 ஞாயிற்றுக்கிழமை மதியம், சென்னை

தொலைக்காட்சிகள் எல்லாம் அவசர செய்தி வாசித்தது.மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் சில நுண் உயிரினிங்கள் கலந்திருக்கலாம் என்றும், ஆகையால் அனைவரும் குடிநீரை ஒரு நிமிடமாவது காய்ச்சி குடிக்க வேண்டும் என்றும் சென்னை குடிநீர் வாரியம் கேட்டுக்கொண்டது. அரசு, குடிநீர் வாரியத்துடன் இணைந்து, விரைந்து செயல்பட்டு இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் என்றும் அந்த அரசு குறிப்பில் கூறப்பட்டது.

ஏப்ரல் 26 ஞாயிற்றுக்கிழமை இரவு, சென்னை

தொலைக்காட்சி, மாலை நாளிதழ்கள், வானொலி என எல்லா சாதனங்களும் இந்த தகவல் எல்லோருக்கும் சேர வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டது.மேலும் இந்த பிரச்சனை எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்றும் விளக்கம் கொடுத்தது.

மாநில முதல்வர் எல்லோருக்கும் விடுக்கும் வேண்டுகோள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சென்னை குடிநீர் வாரியத்தின் தலைவர் பேட்டியும் ஒளிபரப்பானது.

கே: நான் எதற்காக தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்?
ப: சென்னை குடிநீர் வாரியத்தின் நீர்த்தேக்கம் எண் ஆறில் நுண் உயிரினிங்கள் இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம். ஆகையால் மக்களின் பாதுகாப்பு கருதி, தண்ணீரை காய்ச்சி குடிக்க கேட்டுக்கொள்கிறோம்.

கே: தண்ணீரை காய்ச்சி குடிப்பதால் இந்த உயிரினிங்கள் அழிக்கப்படுமா?
ப: தண்ணீரை காய்ச்சி குடிப்பதால் இந்த உயிரினிங்கள் கொல்லப்படும்.

கே: எவ்வளவு நேரம் நான் தண்ணீரை காய்ச்ச வேண்டும்?
ப: உணவுக்கு உபயோக்கிபடும் தண்ணீரையும், குடிக்கும் தண்ணீரையும் ஒரு நிமிடமாவது நன்றாக காய்ச்ச வேண்டும்.

கே: அந்த தண்ணீரில் குளிப்பது, பல் துலக்குதல் போன்றவற்றால் எதாவது பிரச்சனை ஏற்படுமா?
ப : இல்லை. தண்ணீரை உட்கொள்வதால் மட்டுமே பிரச்சனை வர வாய்ப்புள்ளது.

கே: வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் போன்றோர் ஏதாவது தனியாக செய்ய வேண்டுமா?
ப : இல்லை. தண்ணீரை காய்ச்சுவது மட்டுமே போதுமானது.

கே : இந்த நுண் உயிரினிங்கள் எப்படி இருக்கும்?
ப : இவற்றை நம் சாதரண கண்களினால் காண முடியாது. மைக்ரோஸ்கோப் எனப்படும் நுண்காட்டி வழியாக பார்த்தல் ஒரு கொண்டை ஊசி போல காணப்படும்.

கே : இவற்றை உட்கொண்டால் உண்டாகும் பாதிப்புகள் என்ன?
ப: இது வரை பாதிப்புகள் கண்டுபிடிக்க முடியவில்லை. நாங்கள் தொடர்ந்து முயற்சிக்கிறோம்.

அது ஒரு தேவையான, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேட்டியாக தோன்றியது. மேலும் பிரச்சனையின் உக்கிரமும் புரிந்தது.
"தெரிஞ்ச பேய்நாலும் பரவா இல்ல. தெரியாத பிசாசா இருக்கே இது." மக்களின் கவலை வெளிப்பட்டது.

வீட்டில் இருப்பவர்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்கலாம். ஆனால் வெளியே அலைவோரின் நிலைமை பற்றி கேள்வி எழுந்தது.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் இன்னொரு அரசு செய்தி வெளியானது.
அரசு கனிம நீர் (mineral water) உற்பத்தியாளர்களிடம் தண்ணீர் புட்டிகளின் விலையை குறைக்க சொல்லி இருப்பதாகவும், அதற்கு அவர்கள் இது வரை விற்ற விலையில் இருந்து பாதி விலைக்கு விற்க முடிவு செய்திருப்பதாகவும் அது கூறியது.

மேலும் சில நுண்ணலை அடுப்பு(microwave oven) உற்பத்தியாளர்களும் தங்களின் விலையை குறைத்துள்ளதாக கூறினர். கலன் வாயு(Cylinder gas) பற்றி கவலை கொண்ட மக்களுக்கு இது ஒரு நல்ல மாற்றாக தோன்றியது. நுண்ணலை அடுப்பில் தண்ணீர் காய்ச்சுவது சிக்கனமானதாக தோன்றியது.

திங்கட்கிழமை காலை வெளியான அரசு செய்தி குறிப்பில், கலன் வாயுவின் விலையை குறைக்க சொல்லி மத்திய அரசுக்கு மாநில அரசு கோரிக்கை ஏற்படுத்தும் என்றும், ஏற்கனவே நிறைய மக்கள் நுண்ணலை அடுப்பு வாங்குவதால் உடனடியாக மின்சார கட்டணத்தை முடிந்தவரை அரசு குறைத்துள்ளதாகவும் வெளியானது. இந்த மின்சார கட்டண குறைப்பு பிரச்சனை முடியும் வரை தொடரும் என்றும் சொன்னது.

மக்கள் நுண்ணலை அடுப்பு வாங்கினர்.

சில இடங்களில் கடைக்காரர்கள் கனிம நீரின் விலையை குறைத்ததாக தெரியவில்லை. சில இடங்களில் விலை குறைந்து இருந்தது. சில இடங்களில் கனிம நீர் பற்றாகுறையினால் விலை அதிகமாக இருந்தது.

நுண்ணலை அடுப்பின் விலை 50 சதவீத தள்ளுபடியில் விற்பதாய் கடைகள் தெரிவித்தன. மக்கள் சரியான நேரத்தை பயன்படுத்தி கொண்டனர். நிறைய பணம் இல்லாதவர்களுக்கு, மாத தவணை திட்டம் வழங்கப்பட்டது. மக்கள் மேலும் நுண்ணலை அடுப்பு வாங்கினர்.

அடுப்பில் காய்ச்சுவதை விட, இதுவே சரியாக மக்களுக்கு தோன்றியது. கையாள்வதும் மிக சுலபமாய் இருந்தது. யாருக்கும் எந்த நோயும் ஏற்படாமல் நுண்ணலை அடுப்பு காப்பற்றியது.


சென்னை குடிநீர் வாரியம் ஒரு வார காலம் போராடி தண்ணீரில் நுண் கிருமிகள் இல்லை என கண்டுபிடித்தது.

ஏப்ரல் 26 ஞாயிற்றுக்கிழமை காலை, சென்னை மாநில முதல்வர் இல்லம்.

"தலைவரே உங்கள நம்பி நெறைய மைக்ரோவேவ் அடுப்பு இறக்கிட்டேன். சொல்லுங்க இப்போ எப்டி விக்குறது? "

"விக்குறது இருக்கட்டும். எவ்ளோ போட்ருக்க..?"
"10. எண் தம்பியோட மினரல் வாட்டர் பிசிநெஸ்ல இருந்து வந்த காசு எல்லாம். அவன் பிசிநெசும் இப்போ ரொம்ப டல்லாம். அவன்தான் மேஜர் பார்ட்னர் இப்போ வரைக்கும். இப்போ அதுக்கு வேற போட்டி வர மாதிரி சொல்றான்.

"எவ்ளோல முடிக்கலாம்..?"நீங்களே சொல்லுங்க தலைவரே."
"2 ரெண்டுக்கும் 2."

"2 ஆ..?"
"ரெண்டு கல்லுல ஒரு மாமரம் - கேள்வி பட்ருக்க..?"

"புரியலையே தலைவரே..."
"அங்க இருக்க புத்தகத்துல குடிநீர் வாரியம்-நு ஒரு நம்பர் இருக்கும், அத பார்த்து சொல்லு".

3 comments:

Subha said...

kathaiyin pokil, mudivai sattrey yugikka mudinthathu! But puthiyathoru kathai kalam, nalla narration.

ச. சிவராம் குமார் said...

சிறுகதையின் உத்திகள் உனக்கு அழகாக கூடி வருகிறது...
கதையின் தலைப்பு கதையின் போக்கை காட்டிக் கொடுத்துவிட்டது...
அறிவியல் புனைவோ என்று முதலில் நினைத்தேன்...
இதுதான் தண்ணீர் அரசியலோ?
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.!

நந்தா said...

திரைக்கதை நடை நல்ல மெருகேறியுள்ளது
இந்த கதையை எதில் சேர்ப்பது?
science fiction-ஆ science mixture-ஆ
அடுத்து detailing-இல் கவனம் செலுத்தவும்.
அதாவது சினிமாவில் cinemotographer செய்யும் வேலை.
உன் கதைகளெல்லாம் உன் காதுகளால் எழுதப்பட்டவையே!
இது உன் கண்களுக்கான வேலை

Post a Comment