Wednesday, September 17, 2014

சாதி ஒழிப்பு - ஒரு முட்டாள்தனமான சிந்தனை

Share |

சாதி ஒழிப்பிற்காக தன் வாழ்நாள் முழுக்க பாடுபட்ட பெரியாரின் பிறந்ததினம் இன்று. அவர் காலத்திலிருந்து இன்று யோசிக்கும்பொழுது பல்வேறு சாதிய அடிமைத்தனங்கள் மாறியிருந்தாலும்; சாதிய கலவரங்கள் தலைதூக்கும்பொழுதும், மாவட்டங்களில் அப்பட்டமாக தங்கள் வீடுகளிலும், வணிக இடத்திலும் தாங்கள் இந்த சாதியை சேர்ந்தவர்கள் என மக்கள் மார்தட்டும்பொழுதும் முன்பை விட நாம் பின்னோக்கி செல்கிறோமோ என்ற எண்ணமும் தோன்றாமலில்லை.



மற்ற மாநிலங்களில் உள்ள ரெட்டி, நாயுடு, நாயர், யாதவ் பெயர்களை போல தமிழகத்தில் இன்று 90% பேர் தங்கள் பெயரோடு தங்களின் சாதிப் பெரயர்களை சேர்க்காமல் இருப்பதற்கு பெரியார் ஒருவரே முழுக் காரணம். பெயர்களை விட்டெறிந்த நாம் அதனை முழு மனதோடு செய்தோமா என்ற கேள்வி என்னுள் எழுகிறது. மனதளவில இந்த இந்த சாதியை சேர்ந்தவர்கள்தான் நாம் என்ற எண்ணம் நம்மை விட்டு விலகவேயில்லை. அம்பேத்கரும், பெரியாரும் இன்னும் எத்தனையோ தலைவர்கள் போதித்தும்; எத்தனை எத்தனையோ வழிகள் சொல்லியும் ஜாதியை நம் மனம் விட்டொழிப்பதாக இல்லை.



சமூகத்தில் நடக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் அடிப்படை பிரச்சனை அரசியலும், அரசாங்கமும் என்றாலும் சாதிக்கு உண்மையான ஒரு அரசியல் தீர்வு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. நகரமயமாக்கல், காதல் திருமணங்கள் ஆகியவை தீர்வுகளாக முன்வைக்கப்பட்டாலும் நம் மனதில் உள்ள 'சாதீ' நம்மை விட்டு விலகுவதாக தெரியவில்லை.

இந்த நேரத்தில்தான் இந்த முட்டாள்தனமாக யோசனை எனக்கு தோன்றியது. எந்த சாதிப் பெயர்களை தங்கள் பெயரில் இருந்து பெரியார் நீக்க சொன்னாரோ அந்த சாதிப் பெயர்களை மீண்டும் நம் பெயரோடு இணைத்துக்கொள்வது. ஆனால் நம் சாதிப் பெயரை தவிர மற்ற ஏதாவது ஒரு சாதிப் பெரயரை நம் பெயரோடும், நமக்கு பிறக்கும் பிள்ளைகளின் பெயரோடும் இணைப்பது. உதாரணத்திற்கு தலித்தாக பிறந்த ஒருவருக்கு 'பெயர் + வன்னியர்' என்றோ 'பெயர்+ஐயர்' என்றோ வைப்பது. உயர்சாதி என சொல்லப்படும் சாதியினரோடு 'பெயர்+பரையர்' என்று வைப்பது. ஆனால் யாரால் இதை செய்ய முடியும்? - உண்மையிலேயே சாதியை அழிக்க துடிக்கும், சாதியை வெறுக்கும் ஒரு சிலரால் மட்டுமே இதை செய்ய முடியும். முள்ளை முள்ளால் எடுப்பது போல் சாதிப் பெயர்களை வைத்து சாதிய அடையாளங்களை அழிக்கும் ஒரு முட்டாள்தனமான யோசனை இது :).

1 comments:

Unknown said...

Anna its absolutely right. But I feel that if our motive is to come out of this we should not use it any aspect anna. People have started walking but not completely out of it. We need to help them do it. Anna fighting for womens equal rights is even secondary. I am still seeing people ill treating others based on castes. Only when we consider and respect all as single specie we can improve. Mullai ninaithu kooda payanpadutha vendaam indha paazhai pona saathiyai.

Post a Comment